கன்று ஈனாத பசுமாட்டிடமிருந்து பால் கறக்க முயல்வதைப்போல, சிந்தனைகளில் லயிக்காத மனத்திலிருந்து ஆக்கங்களை உருவாக்க முயற்ச்சிக்கிறேன்.எனக்கு இன்றைய சிந்தனைகள் நாளைய அவமானங்களாகும்போது, எதை நான் பதிவு செய்ய இங்கு? நான் எதை நோக்கி பயணிக்கிறேன்? முடிவான சிந்தனையை நோக்கியா? அல்லது சிந்தனைகளின் முடிவை நோக்கியா? ஆர்ப்பரிக்கும் அலைகள், நீரில் மிதந்து வரும் அழுக்குகளையே அள்ளி தெளிக்கும்போது, ஆழ்கடல், கரையில் காத்திருக்கும் கால்களுக்கு சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை.
No comments:
Post a Comment