பனிமலர்

பனிமலர்
பனிமலர்

Tuesday, October 29, 2024

விஜயின் அரசியல் நுழைவு

அரசியல் தற்குறி என்று விஜயை அழைப்பதற்க்கு முன்னால் அவருடைய தந்தை சந்திரசேகரை தான் அழைக்கவேண்டும். அவர் தான் இந்த அரிதாரம் விஜய்க்கு நன்றாக வரும் என்று ஆருடம் கூறியிருக்க அதிக வாய்ப்பு கொண்டவர். இவர்களை போன்றோர் எல்லோரும் எண்ணுவது அரசியல் என்பது பணம் நிறைய கைகளில் இருக்கும்போது செய்யப்படும் மற்றுமொரு முதலீடு என்பது தான். அரசியல் எனும் வார்த்தையின் அடிப்படை பொருள் சமூக சிந்தனை, தியாகம், மற்ற உயிர்களை தம் உயிர் போல் எண்ணி பரிவு கொண்டு அதன் வலிகளுக்கு சமூகத்தில் தீர்வு தேடுவது போன்றவை தான். ஆனால் ஏதோ புதிய வேலைக்கு எண்ட்ரி கொடுப்பது போல இன்றிலிருந்து நான் அரசியல்வாதி என்று சொல்வது நம் மக்களை அடி முட்டாளாக கருதுவது போன்றதாகும். இந்த முட்டாள் மக்களுக்கு நம் பிரச்சனைகள் எதுவென்றே இன்னமும் தெரியவில்லை. ஊழல் என்று இவர்கள் கூறுவது இன்று எல்லா தரப்பு மக்களும் ஈடுபடும் பொருளாதார திருட்டு. ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் இதே பொருளாதார சுரண்டலை செய்ய எந்தவித குற்றவுணர்வுமே இல்லாமல் அதை செய்வதற்க்கு சமூக சட்டவிதிகளை கடவுள், ஆன்மீகம் என்கிற பெயரில் வடிவமைத்துக்கொண்டு அது ஏதோ தம் அடிப்படை உரிமை என்பது போலவும், சுரண்டப்படும் மக்கள் அவர்களுக்கு தம் பொருளாதாரத்தையும், பொருளாதார‌ உரிமைகளையும் கொடுப்பது தம் கடமை போலவும் மாற்றி வைத்திருக்கிறது. இது மேலே சொன்ன வெறும் பொருளாதார திருட்டு என்னும் ஊழலை விட சமூகத்தில் அடிமைத்தனத்தை நம் மீது சுமத்துகிறது. இதை அடிப்படையாக பேசாமல் ஊழலை மட்டும் பிரதானமாக பேசும்படி அந்த சுரண்டும் சமூகம் நம்மை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது.

No comments: