பனிமலர்

பனிமலர்
பனிமலர்

Monday, February 3, 2025

இனத்துய்மைவாதம் vs மொழித்தூய்மைவாதம்

பெரியார் என்றுமே மொழியை வைத்தோ, இனத்தை வைத்தோ மக்களை பிளவுபடுத்தினார் இல்லை. அப்படி அவர் சொல்லியிருந்தால் அதுவும் தவறு. ஆதிக்க கருத்தியலையும் நேர்மையற்றத்தனத்தையும் மட்டுமே அவர் எதிர்த்தார் என்பது என் புரிதல். திராவிடம் என்பது ஆரியம் என்னும் ஆதிக்க கருத்தியலுக்கு எதிரான ஒரு சொல். அச்சொல்லை சுற்றி சமூகநீதி, சமத்துவம் சார்ந்த கருத்தியல் கொள்கைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த ஆயுதத்தை எடுத்து மற்றவர்களை வீழ்த்த நினைக்கிறீர்களோ, அதே ஆயுதத்தால் வீழ்த்தப்படுவீர்கள். அண்ணாவும், கலைஞரும் மொழியை ஒரு ஆயுதமாக எடுத்து ஆரியத்துக்கு எதிராக களமாடினார்கள். இனத்தால் பார்ப்பனியத்தை எதிர்க்கொண்டு ஒதுக்கிவைத்தார்கள். இன்று அதே மொழியால் ஒருவர் மொழித்தூய்மைவாதம் பேசிக்கொண்டு இனத்தை இரண்டாம் பட்சமாக தள்ளிவைத்து அரசியல் செய்கிறார்கள். இனிமேலாவது கொஞ்சம் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் சித்தாந்தம் அமையுங்கள்.

Friday, December 27, 2024

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்முறை...

இதில் எல்லோரும் மறந்த இரு விடயங்கள்.அவைகளை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 1. காதல் என்பது ஒரு இயல்பான உணர்வு. காதலர்கள் தம் இணையுடன் முழு நம்பிக்கை ஏற்படாதவரை உடல் ரீதியாக காதல் வயப்படுவதை தடுக்க வேண்டும். அப்படியே அது நடந்தாலும் அதையே குற்றவுணர்வாக்கி அதை காதலர்களின் பெற்றோரிடம் சொல்வேன் என்று மிரட்டி தம் பாலியல் இச்சைக்கு இணங்க வைக்கும் சமூக விரோதிகளின் வலையில் வீழ்வதை விட பெற்றோர்களிடம் தாம் உடல் ரீதியாக காதல் வயப்பட்டு விட்டேன் என்று தெரிவித்து விடுவது எவ்வளவோ பரவாயில்லை. அதை வீட்டில் சொன்னால் எதிர்கொள்ளும் பெற்றோர்கள், காதலர்களுக்கு உடலின்பம் தேடுவது இயற்கையின் உந்துதல் தான் என்பதை புரிந்துக்கொண்டு தத்தம் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கி அனுப்புவது இது போன்ற சமூக விரோதிகள் குழந்தைகளிடம் பாலியல் சுரண்டலுக்கு அழைப்பு விடுக்கும்போது எதிர்கொள்வது எளிதாக இருக்கும். அதை தவிர உடலில் இல்லை மானம், அது உணர்வு சார்ந்தது என்ற தெளிவை நம் சமூகத்திற்க்கு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. "பாபநாசம்" போன்ற திரைப்படங்களில் காட்டப்படும் பாலியல் சுரண்டல்கள் பெரும்பாலும் பெண்ணின் உடலை வைத்து "மானம் போய்விட்டதாக" பெண் கருதும் எண்ண நிலைக்கு இழுத்து செல்கின்றனர். வெளி நாடுகளில் சூரிய குளியல் கடற்கரைகளில் பெண்கள் தாம் பிறந்த மேனியுடன் இருப்பதை அந்த சமூகங்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் இங்கு பெண்ணின் உடலை அவளின் அனுமதி இல்லாமல் படம் பிடித்தால் கூட அதற்கு அப்பெண்ணின் மானம் போய்விட்டதாக கருத அவளே தலைப்படுகிறாள். 2. இந்த விடயத்தில் பலிகடா ஆக்கப்பட்ட அப்பெண்ணின் காதலன், ஒரு ஆண்மை உள்ளவனாக அப்பெண்ணை விருப்பமற்ற உறவுக்கு உட்படுத்தப்படும்போது கொதித்து எழுந்து போராடியிருக்க வேண்டும். இதுவே மாநிலக்கல்லூரி அல்லது பச்சையப்பன் கல்லூரி மாணவனாக இருந்தால் போராடியிருப்பான். நன்றாக படிக்க வைக்கிறேன் என்று நம் குழந்தைகளின் வீரத்தை அறவே அழித்து விடுகிறோம். வீரமற்ற கல்வியால் ஒரு பயனும் இல்லை.

Wednesday, November 13, 2024

கலைஞர் திரு. கருணாநிதி அவர்கள்

எதை தம் அரசியலுக்கு கருவியாக பயன்படுத்தினாரோ அதை வைத்தே இன்று ஓரங்கட்டப்படுகிறார். அன்று தமிழ், தமிழென்று காணும் இடமெல்லாம் "தமிழ் மொழி வாழ்க" என்று மக்கள் மனத்தில் ஒரு முட்டாள்தனத்தை விதைத்தார். இன்று ஒரு அயோக்கியன் சில சாதிகள் இந்நிலபரப்பிற்கே உரிய சாதிகள் என்று கூறிக்கொண்டு கலைஞர் தமிழ் சாதியை சேர்ந்தவர் இல்லை என்று கூறுகிறான். மொழி என்பது மற்றவர்களோடு தொடர்பு கொள்ளவும், கலை உணர்வை வெளிப்படுத்தவும் பயன்படும் ஒரு கருவியே அன்றி அதனால் ஒரு அடையாளமும் நமக்கு தரமுடியாது என்பதை பெரியாரின் வழி நின்று தெளிவு படுத்தட்டும். வெறும் மொழி மட்டுமே நமக்கு எந்தவித பெருமிதத்தையும் தராது. அது தூக்கி செல்லும் சிந்தனை தான் முக்கியமே தவிர மொழி என்னும் கருவியை தூர தள்ளுவோம். 

Tuesday, October 29, 2024

விஜயின் அரசியல் நுழைவு

அரசியல் தற்குறி என்று விஜயை அழைப்பதற்க்கு முன்னால் அவருடைய தந்தை சந்திரசேகரை தான் அழைக்கவேண்டும். அவர் தான் இந்த அரிதாரம் விஜய்க்கு நன்றாக வரும் என்று ஆருடம் கூறியிருக்க அதிக வாய்ப்பு கொண்டவர். இவர்களை போன்றோர் எல்லோரும் எண்ணுவது அரசியல் என்பது பணம் நிறைய கைகளில் இருக்கும்போது செய்யப்படும் மற்றுமொரு முதலீடு என்பது தான். அரசியல் எனும் வார்த்தையின் அடிப்படை பொருள் சமூக சிந்தனை, தியாகம், மற்ற உயிர்களை தம் உயிர் போல் எண்ணி பரிவு கொண்டு அதன் வலிகளுக்கு சமூகத்தில் தீர்வு தேடுவது போன்றவை தான். ஆனால் ஏதோ புதிய வேலைக்கு எண்ட்ரி கொடுப்பது போல இன்றிலிருந்து நான் அரசியல்வாதி என்று சொல்வது நம் மக்களை அடி முட்டாளாக கருதுவது போன்றதாகும். இந்த முட்டாள் மக்களுக்கு நம் பிரச்சனைகள் எதுவென்றே இன்னமும் தெரியவில்லை. ஊழல் என்று இவர்கள் கூறுவது இன்று எல்லா தரப்பு மக்களும் ஈடுபடும் பொருளாதார திருட்டு. ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் இதே பொருளாதார சுரண்டலை செய்ய எந்தவித குற்றவுணர்வுமே இல்லாமல் அதை செய்வதற்க்கு சமூக சட்டவிதிகளை கடவுள், ஆன்மீகம் என்கிற பெயரில் வடிவமைத்துக்கொண்டு அது ஏதோ தம் அடிப்படை உரிமை என்பது போலவும், சுரண்டப்படும் மக்கள் அவர்களுக்கு தம் பொருளாதாரத்தையும், பொருளாதார‌ உரிமைகளையும் கொடுப்பது தம் கடமை போலவும் மாற்றி வைத்திருக்கிறது. இது மேலே சொன்ன வெறும் பொருளாதார திருட்டு என்னும் ஊழலை விட சமூகத்தில் அடிமைத்தனத்தை நம் மீது சுமத்துகிறது. இதை அடிப்படையாக பேசாமல் ஊழலை மட்டும் பிரதானமாக பேசும்படி அந்த சுரண்டும் சமூகம் நம்மை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது.

Monday, October 16, 2023

Why west is fond of Jews and averse with Muslims?

Though Judaism does not accept the Jesus Christ as the prophet or messiah, why Christians has more inclination on Jews over Islam?

As per my assessment,  west sees every philosophy or religion as whether they have any concern about the accumulation of wealth or economic disparity in their very fundamental philosophies or not. If any religion that emphasize the economic or social equality, they see that as the threat to their authority which is helping them to protects their vested interests.

The philosophies whether they nourished or getting slander is only depends on the very idea they have on economic or social inequality. The mankind always survived by the exploitation over the other living beings. If any concept is against this exploitation against the fellow human beings at least, they are being opposed here vehemently. 

Islam emphasizes the equality at least philosophically, whereas the other religions does not emphasize it to the degree it is mandated as one of the core philosophy in Islam. Religion like Hinduism demands social inequality as the mandated nature of the society and created supporting systems to protect the very idea of it.

Thursday, August 12, 2010

ஆழ்கடல்


கன்று ஈனாத பசுமாட்டிடமிருந்து பால் கறக்க முயல்வதைப்போல, சிந்தனைகளில் லயிக்காத மனத்திலிருந்து ஆக்கங்களை உருவாக்க முயற்ச்சிக்கிறேன்.எனக்கு இன்றைய சிந்தனைகள் நாளைய அவமானங்களாகும்போது, எதை நான் பதிவு செய்ய இங்கு? நான் எதை நோக்கி பயணிக்கிறேன்? முடிவான சிந்தனையை நோக்கியா? அல்லது சிந்தனைகளின் முடிவை நோக்கியா? ஆர்ப்பரிக்கும் அலைகள், நீரில் மிதந்து வரும் அழுக்குகளையே அள்ளி தெளிக்கும்போது, ஆழ்கடல், கரையில் காத்திருக்கும் கால்களுக்கு சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை.

Tuesday, July 15, 2008

கலாச்சாரம்

பிரச்சனை

தமிழ் மக்களிடம் இன்றைய முக்கியமான பிரச்சனை கலாச்சார சீரழிவு தான். புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தில் வாழும் தமிழர்களும் இன்று இப்பிரச்சினையை பெரிதும் விவாதிக்கின்றனர். இப்பிரச்சனையை நாமும் இங்கு அலசி ஒரு முடிவுக்கு வருவோம்.

அலசல்

கலாச்சாரம் என்பது என்ன?


கலாச்சாரத்தை பற்றி பல வறையரைகள் இருந்தாலும் சில முக்கிய வரையரைகளை எடுத்து கொள்வோம்.

"Culture refers to the cumulative deposit of knowledge, experience, beliefs, values, attitudes, meanings, hierarchies, religion, notions of time, roles, spatial relations, concepts of the universe, and material objects and possessions acquired by a group of people in the course of generations through individual and group striving."

"கலாச்சாரம் என்பது சேமித்த அறிவு, அனுபவங்கள், நம்பிக்கைகள்,மதிப்புகள்,நடத்தைகள்,விளக்கங்கள்,கட்டுகோப்புகள்,மதம்,காலத்தின் வெளிப்பாடுகள்,வேஷங்கள்,அண்டத்திலுள்ள மற்ற பொருட்களை சார்ந்த பிணைப்புகள்,அண்டத்தின் தத்துவங்கள் மற்றும் தனியாகவோ அல்லது குழுவாகவோ பல தலைமுறைகளாக தொட்டு உணரக்கூடிய பொருட்கள் மற்றும் பிற உரியன ஆகியவற்றின் மொத்தமே ஆகும்."

"Culture is symbolic communication. Some of its symbols include a group's skills, knowledge, attitudes, values, and motives. The meanings of the symbols are learned and deliberately perpetuated in a society through its institutions."

"Culture is the sum of total of the learned behavior of a group of people that are generally considered to be the tradition of that people and are transmitted from generation to generation. "

To be continued...